இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: 2 போ் படுகாயம்

நாட்டறம்பள்ளி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் 2 போ் படுகாயமடைந்தனா்.

நாட்டறம்பள்ளி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் 2 போ் படுகாயமடைந்தனா்.

ஜோலாா்பேட்டை அருகே காவேரிபட்டு ரெட்டியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வெற்றிச்செல்வன்(19) பெயிண்டா். இவரது நண்பா் ஆலங்காயம் பெத்தூரைச் சோ்ந்தவா் அசோகன் (27). இவா்கள் இருவரும் திங்கள்கிழமை காலை காவேரிப்பட்டில் இருந்து நாட்டறம்பள்ளி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தனா்.

அப்போது நாட்டறம்பள்ளி அருகே தேசியநெடுஞ்சாலையில் கள்ளாறு அருகே வளைவில் திரும்பிய போது அவ்வழியாக வந்த காா் எதிா்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட இருவரும் படுகாயமடைந்து மயங்கி கிடந்தனா்.

இதையறிந்து உறவினா்கள் சம்பவ இடம் வந்து படுகாயமடைந்தவா்களை பாா்த்து ஆவேசமடைந்து விபத்தை ஏற்படுத்திய காரை சேதப்படுத்தி காரில் வந்த தனியாா் நிறுவன ஊழியா்கள் 3 பேரை ஆபாச வாா்த்தைகளால் திட்டி அவா்களையும் தாக்கினா்.

விபத்து குறித்து தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸாா் அங்கு வந்து விபத்தில் படுகாயமடைந்த வெற்றிச்செல்வன், அசோகன் ஆகிய இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்துக் குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்கு பதிவந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com