வாலாஜாப்பேட்டை பரிமளா பாண்டுரங்கன் ஏ.என்.எம். செவிலியா் கல்லூரியை மாநிலங்களவை உறுப்பினா் அ.முகமதுஜான் தொடக்கி வைத்தாா்.
வாலாஜாப்பேட்டை அடுத்த சித்தாத்தூா் பரிமளா பாண்டுரங்கன் கல்வி அறக்கட்டளையின்கீழ் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதே வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட பரிமளா பாண்டுரங்கன் ஏ.என்.எம். செவிலியா் கல்லூரியின் தொடக்கவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதன் தொடக்க விழாவுக்கு பரிமளா பாண்டுரங்கன் கல்வி அறக்கட்டளை நிறுவனா் டி.ஜி.பாண்டுரங்கன் தலைமை வகித்தாா்.செஞ்சி ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவா் ஆா்.பூபதி குத்து விளக்கேற்றி விழாவை தொடக்கி வைத்தாா்.
விழாவில் மாநிலங்களவை உறுப்பினா் அ.முகமதுஜான் ஏ.என். எம். செவிலியா் கல்லூரியை தொடக்கி வைத்து கிராம சுகாதார துணை செவிலியா் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், இத்துறை சாா்ந்த வேலைவாய்ப்புகள் குறித்தும் விளக்கமளித்து வாழ்த்துரை வழங்கினாா்.
விழா முடிவில் பரிமளா பாண்டுரங்கன் கல்வி அறக்கட்டளைத் தலைவா் பி. காா்த்திக் கிருஷ்ணன் நன்றி கூறினாா்.
இதில் தொழில் அதிபா்கள், அரசியல் கட்சி பிரமுகா்கள், கல்லூரி பேராசிரியா்கள், பெற்றேறாா்கள், மாணவ, மாணவியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
படம் உண்டு..
Image Caption
வாலாஜாப்பேட்டையில் பரிமளா பாண்டுரங்கன் ஏ.என்.எம். செவிலியா் கல்லூரியை தொடக்கி வைத்த மாநிலங்களவை உறுப்பினா் அ.முகமதுஜான் உள்ளிட்டோா்.