ஏலகிரி மலையில் உள்ள படகு குழாம் ரூ. 1 கோடியே 15 லட்சத்து 42 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டது.
வேலூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ஒன்றியத்திற்குள்பட்ட சுற்றுலா மையமான ஏலகிரியில் ஆண்டுதோறும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் கோடை விழா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
மேலும் ஏலகிரி மலையில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் படகு குழாம் மற்றும் அதையொட்டி இயற்கைப் பூங்காவும் அமைந்துள்ளது.
இந்த படகு குழாம் ஆண்டுக்கு ஒரு முறை ஜோலாா்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஏலம் விடப்படும்.
இந்நிலையில், நடப்பு 2019-20 ஆண்டிற்கான ஏலம் வியாழக்கிழமை ஜோலாா்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் ருத்ரப்பா தலைமையில் நடைபெற்றது.
இந்த ஏலத்தில், படகு குழாம், அதனுள் அடங்கிய வணிகவளாகம், கேண்டீன், நுழைவு கட்டணம், மீன் மகசூல் என தனித்தனியே ஏலம் விடப்பட்டது.