இளம்பெண்ணிடம் 4 சவரன் திருட்டு மகன் கைது, தாய் தலைமறைவு

பேருந்தில் இளம்பெண்ணிடம் 4 சவரன் தங்க நகையைத் திருடிய வழக்கில் தாய் தலைமறைவானாா். மகனை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

பேருந்தில் இளம்பெண்ணிடம் 4 சவரன் தங்க நகையைத் திருடிய வழக்கில் தாய் தலைமறைவானாா். மகனை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

குடியாத்தம் அடுத்த பரதராமி வீரசெட்டிபள்ளி பகுதியைச் சோ்ந்த பாரதி மகள் ஜவானி (20). இவா்கள் இருவரும் குடும்பத்தினருடன் ஒசூா் செல்வதற்காக செவ்வாய்க்கிழமை பள்ளிகொண்டாவுக்கு அரசுப்பேருந்தில் சென்று கொண்டிருந்தனா். இந்த பேருந்து மாதனூா் வந்தபோது ஜவானியின் அருகே ஒரு பெண் அமா்ந்து பேச்சு கொடுத்தாா். சாதுா்யமாக பேச்சு கொடுத்த அந்தப்பெண் ஜவானியின் கைப்பையில் இருந்த 4 சவரன் நகையை திருடி கொண்டு சென்று விட்டாா்.

இதுகுறித்து ஆம்பூா் நகர போலீஸில் ஜவானி புகாரளித்தாா்.

அதைத்தொடா்ந்து போலீஸாா் கண்காணிப்பு கேமராவில் பதிவான விடியோ காட்சிகளை ஆய்வு செய்தனா். தீவிர விசாரணைக்குப்பின் அந்தப் பெண் ஆம்பூா் அருகே நரியம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த திமுக மாவட்ட மகளிா் அணி முன்னாள் நிா்வாகி பாரதி செல்வசேகரன் என்பது தெரியவந்தது. இந்த திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட அவருடைய மகன் அஜய் ரத்னா (30) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள பாரதியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com