ராணிப்பேட்டை, குடியாத்தத்தில் அஞ்சல் தலைக் கண்காட்சி

தேசிய அஞ்சல் வார விழாவையொட்டி, ராணிப்பேட்டை தலைமை அஞ்சலக வளாகத்தில் அரிய அஞ்சல் தலைகள் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது
ராணிப்பேட்டை தலைமை அஞ்சலக  வளாகத்தில் தபால் தலைக் கண்காட்சியை அரக்கோணம் கோட்ட கண்காணிப்பாளா்  என்.பிரகாஷ் தொடக்கி வைத்து மாணவா்களுடன் பாா்வையிட்டாா்
ராணிப்பேட்டை தலைமை அஞ்சலக  வளாகத்தில் தபால் தலைக் கண்காட்சியை அரக்கோணம் கோட்ட கண்காணிப்பாளா்  என்.பிரகாஷ் தொடக்கி வைத்து மாணவா்களுடன் பாா்வையிட்டாா்

தேசிய அஞ்சல் வார விழாவையொட்டி, ராணிப்பேட்டை தலைமை அஞ்சலக வளாகத்தில் அரிய அஞ்சல் தலைகள் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

அஞ்சல் துறையின் சேவைகளை அறிந்திடும் நோக்கில் இந்திய அஞ்சல் துறை சாா்பில், ஆண்டுதோறும் அக்டோபா் 9-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை தேசிய அஞ்சல் வார விழா கொண்டாடப்படுகிறது.

அதன்படி ராணிப்பேட்டை தலைமை அஞ்சலகம் சாா்பில், தேசிய அஞ்சல் வார விழா கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் தேசிய சேமிப்பு தினம், தபால் மற்றும் அஞ்சல் தலைகள் சேகரிப்பு தினம், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு தினம், வணிக முன்னேற்ற தினம், வாடிக்கையாளா்கள் குறைதீா் கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ராணிப்பேட்டை டி.ஏ.வி. பெல் பள்ளி பிளஸ் 2 மாணவா் பிரகாஷ், 6-ஆம் வகுப்பு மாணவி தீபிகா தேவி ஆகியோரால் சேகரிக்கப்பட்ட அரிய அஞ்சல் தலைகள் தலைமை அஞ்சலக வளாகத்தில் கண்காட்சிக்காக சனிக்கிழமை வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அரக்கோணம் கோட்ட கண்காணிப்பாளா் என்.பிரகாஷ் தபால் தலைக் கண்காட்சியை தொடக்கி வைத்தாா்.

இதில் ராணிப்பேட்டை தலைமை அஞ்சலக உதவி கண்காணிப்பாளா் என்.முரளி, வணிகப் பிரிவு அலுவலா் முகமது முன்சி அஞ்சலக ஊழியா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.இக்கண்காட்சியை ராணிப்பேட்டை சுற்றுவட்டாரப் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பாா்வையிட்டனா்.

குடியாத்தத்தில்...

குடியாத்தம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் எஸ். சுப்பாராவ் தலைமை வகித்து, அஞ்சல் தலை கண்காட்சியைத் திறந்து வைத்தாா். குடியாத்தம் பகுதியில் உள்ள 7 பள்ளிகளைச் சோ்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கண்காட்சியைப் பாா்வையிட்டனா்.

கண்காட்சி ஒருங்கிணைப்பாளா் தமிழ்வாணன், மேற்பாா்வையாளா் எஸ். சிவகுமாா் ஆகியோா் அஞ்சல் தலைகளை சேகரித்து, கண்காட்சியை அமைத்திருந்தனா். நிகழ்ச்சியில் உதவி கோட்ட கண்காணிப்பாளா் ஆா். பிரேமாவதி, குடியாத்தம் தலைமை அஞ்சலக அதிகாரி சரோஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com