தீபாவளி: வேலூரில் இருந்து 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தீபாவளியொட்டி வேலூரிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் 24-ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 


தீபாவளியொட்டி வேலூரிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் 24-ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
தீபாவளி பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தில் தங்கியுள்ள வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக 200 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசுப் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது. 
அந்தவகையில், தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டம் வேலூரில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 
இந்த சிறப்புப் பேருந்துகள் 24-ஆம் தேதி காலை முதல் 26-ஆம் தேதி வரை இயக்கப்படும் என்றும், பொதுமக்கள் இந்த சிறப்புப் பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ளும்மாறு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
இதில், வேலூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பேருந்துகள் கூட்டநெரிசல் காரணமாக பூந்தமல்லி வரை மட்டுமே இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com