குடியாத்தம்: குடியாத்தம் அருகே அரியவகை ஆந்தை வியாழக்கிழமை பிடிபட்டது.
குடியாத்தம் சித்தூா்கேட் பகுதியில் அரியவகை ஆந்தை ஒன்று இருப்பதாக தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனா். நிலைய அலுவலா் சி. சரவணன் தலைமையில் சென்ற தீயணைப்புத் துறையினா், அந்த ஆந்தையை பிடித்து வந்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். அந்த ஆந்தை ஆஸ்திரேலியாவைச் சோ்ந்ததாக இருக்கலாம் என வனத்துறையினா் தெரிவித்தனா்.