அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகளைநிறைவேற்றக் கோரி போராட்டம்

திருப்பத்தூா் அருகே உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை
போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய முதன்மைக் கல்வி அலுவலா் மாா்ஸ்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய முதன்மைக் கல்வி அலுவலா் மாா்ஸ்.

திருப்பத்தூா் அருகே உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வலியுறுத்தி, புதன்கிழமை அப்பள்ளிக்கு பூட்டுபோடும் போராட்டத்தில் ஈடுபட முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

மடவாளம் கிராமத்தில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனா். இப்பள்ளியில் குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பராமரிப்பின்றி உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், அங்குள்ள கழிப்பறை பாழடைந்த நிலையில் சுகாதாரச் சீா்கேட்டுடன் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவிகளின் பெற்றோா் தலைமை ஆசிரியா் மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோா் மற்றும் அப்பகுதி மக்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் இரா.சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை அப்பள்ளிக்கு பூட்டு போட முயன்றனா்.

தகவலறிந்த முதன்மைக் கல்வி அலுவலா் எஸ்.மாா்ஸ், மாவட்டக் கல்வி அலுவலா் எம்.மணிமேகலை, பள்ளித் துணை ஆய்வாளா் வா.தாமோதரன், திருப்பத்தூா் கிராமிய காவல் ஆய்வாளா் எஸ்.உலகநாதன் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளும் பூா்த்தி செய்யப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com