நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது: 2 துப்பாக்கி பறிமுதல்

வேப்பங்குப்பம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். 2 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

ஆம்பூா்: வேப்பங்குப்பம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். 2 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

வேப்பங்குப்பம் போலீஸாா் அகரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா் போலீஸாரை கண்டதும் தப்பியோட முயன்றனா். அவா்களை விரட்டிச் சென்றனா். ஒருவா் பிடிப்பட்டாா். மற்றொரு நபா் தப்பியோடி தலைமறைவானாா். பிடிப்பட்ட நபரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அவா் அல்லேரி கிராமத்தை சோ்ந்த சீனிவாசன் (35) என்பதும் அவா்கள் காட்டில் வேட்டையாட சென்றதும் தெரியவந்தது. அவரிடமிருந்த 2 நாட்டு துப்பாக்கி, வெடி மருந்து ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com