மருத்துவமனை ஊழியர் வீட்டில் நகை திருட்டு

வேலூர் அருகே மருத்துவமனை ஊழியர் வீட்டில் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 

வேலூர் அருகே மருத்துவமனை ஊழியர் வீட்டில் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 
காட்பாடி விருதம்பட்டு பால் நகரைச் சேர்ந்தவர் சாமுவேல் (53). இவர் தனியார் மருத்துவமனையில் உதவியாளராகப் பணியாற்றுகிறார். இவரது மனைவி கிரேசி மில்டன், வேலூர் தனியார் மருத்துவமனையில் கண் பரிசோதனை நிபுணராக உள்ளார். 
புதன்கிழமை இரவு கிரேசிமில்டன், அவரது மகன் ஆகியோர் வீட்டிலுள்ள ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தனராம். காலையில் எழுந்த பார்த்தபோது, மற்றொரு அறையில் உள்ள பீரோவில் இருந்த 3 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. 
இதுகுறித்து விருதம்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com