பனப்பாக்கம் அருகே இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தார்.
கர்ணாவூரைச் சேர்ந்தவர் பக்தன் (52) விவசாயத் தொழிலாளி. இவர், செவ்வாய்க்கிழமை கர்ணாவூரில் இருந்து பனப்பாக்கத்துக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தார். பெருவளையம் லட்சுமிமாபுரம் அருகே சென்றபோது, எதிரே பெண், தனது இரு குழந்தைகளுடன் பைக்கில் வந்தாராம். அப்போது, இரு பைக்குகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பக்தன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பெண், இரு குழந்தைகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
இதுகுறித்து நெமிலி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.