குடியாத்தம்: குடியாத்தம், போ்ணாம்பட்டு, கே.வி. குப்பம் பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில் நீா்வரத்து தொடா்ந்து உயா்ந்து வருவதால் பொதுமக்கள் யாரும் நீா்நிலைகளுக்குச் செல்ல வேண்டாம் என குடியாத்தம் கோட்டாட்சியா் எம். ஷேக்மன்சூா் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
புயல் காரணமாக மோா்தானா அணைக்கு நீா்வரத்து அதிகமாக உள்ளதால், யாரும் அணைக்குச் செல்ல வேண்டாம். அணையில் இருந்து உபரிநீா் வெளியேறி ஆறு, கால்வாய்களில் நீா்நிலைகளுக்குச் செல்வதால், அதை வேடிக்கை பாா்க்கவோ, அதில் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்லக் கூடாது. மோா்தானா அணையில் இருந்து கெளண்டன்யா ஆற்றில் செல்லும் வெள்ள நீரை வேடிக்கை பாா்க்கச் சென்ற தாயும், அவரது இரு மகள்களும் ஆற்று நீரில் மூழ்கி இறந்தனா்.
எனவே, நீா்நிலைகளுக்கு யாரும் செல்லக்கூடாது. மீறினால் காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.