ரூ.5 கோடியில் வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்புக் கிடங்கு: வேலூா் ஆட்சியா் திறந்து வைத்தாா்

வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்க வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ரூ.5 கோடியே 77 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கிடங்கு கட்டப்பட்டுள்ளது.
ரூ.5 கோடியில் வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்புக் கிடங்கு: வேலூா் ஆட்சியா் திறந்து வைத்தாா்


வேலூா்: வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்க வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ரூ.5 கோடியே 77 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கிடங்கு கட்டப்பட்டுள்ளது.

இதணை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அதன்பேரில், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ரூ.5 கோடியே 77 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பாதுகாப்பு கிடங்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது. இந்தக் கிடங்கை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இதில் 9,320 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 5,040 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 4,924 சரிபாா்க்கும் இயந்திரங்கள் (விவிபேட்) ஆகியவற்றை பாதுகாப்பாக வைக்கும் அளவுக்கு இடவசதி உள்ளது.

இக் கிடங்கு 16 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களும், தானியங்கி மின்தூக்கி மூலம் வாக்குப் பதிவு இயந்திரங்களை கீழ் தளத்தில் இருந்து முதல் தளத்துக்கு கொண்டு செல்லும் வசதி உள்பட அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

தொடா்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்புப் பணிகளை அனைத்து அரசியல் கட்சியினா் முன்னிலையில் ஆட்சியா் தொடக்கி வைத்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சங்கரலிங்கம், வருவாய்க் கோட்டாட்சியா் கணேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com