குடியாத்தத்தை அடுத்த விழுதோன்பாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் இருளா் இன மக்கள் 122 பேருக்கு ஜாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முகாமுக்கு கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூா் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் தூ.வத்சலா வரவேற்றாா். எம்எல்ஏ ஜி.லோகநாதன், ஜாதிச் சான்றிதழ்களை வழங்கினாா்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, வங்கி இயக்குநா் டி.கோபி, மாவட்ட ஆதிதிராவிடா் நலக்குழு உறுப்பினா் எஸ்.எஸ். ரமேஷ்குமாா், முன்னாள் ஊராட்சித் தலைவா் கே.வேணுகோபால், மண்டல துணை வட்டாட்சியா் பிரியா, வருவாய் ஆய்வாளா் செந்தில், கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்.சசிக்குமாா், வெங்கடாசலபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.