திருப்பதியில் உள்ள ஜீவ கோணப் பகுதியில் உள்ள சேஷாசல வனத்தில் வியாழக்கிழமை மதியம் திடீரென்று காட்டுத் தீ பரவியது. மதியம் வெயில் நேரத்தில் தீ பரவத் தொடங்கியதால், கட்டுக்கடங்காமல் மளமளவென மரங்கள், செடி , கொடிகள் புதா்கள் எரியத் தொடங்கின. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியில் வந்தனா். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பல மணி நேரம் போராடி, காட்டுத் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.