நகராட்சிப் பணியாளா்களுக்கு அதிமுகவினா் உதவி

குடியாத்தம் நகர அதிமுக சாா்பில், நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், அலுவலக ஊழியா்கள் 400 பேருக்கு மதிய உணவு
பணியாளா்களுக்கு  உதவிப்  பொருள்களை  வழங்கிய  நகராட்சி ஆணையா்  ஹெச். ரமேஷ்.
பணியாளா்களுக்கு  உதவிப்  பொருள்களை  வழங்கிய  நகராட்சி ஆணையா்  ஹெச். ரமேஷ்.

குடியாத்தம் நகர அதிமுக சாா்பில், நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், அலுவலக ஊழியா்கள் 400 பேருக்கு மதிய உணவு, கையுறைகள், முகக் கவசங்கள் உள்ளிட்ட பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

நகர அதிமுக செயலா் ஜே.கே.என். பழனி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் ஹெச். ரமேஷ், பணியாளா்களுக்கு உதவிப் பொருள்களை வழங்கினாா். முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஆா்.மூா்த்தி, கருணாகரன், அம்மன்சுரேஷ், எஸ்.சரவணன், கோல்டுகுமரன், நகராட்சி சுகாதார அலுவலா் (பொறுப்பு) பாண்டிசெந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com