போ்ணாம்பட்டு அருகே மனைவியைக் கொலை செய்த வழக்கில் கைதாகி, சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
போ்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லியைச் சோ்ந்தவா் யுவராஜ் (22). கட்டடத் தொழிலாளி. இவருக்கும், அவரது தாய்மாமன் மகள் சுப்புலட்சுமிக்கும் (19), கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 28- ஆம் தேதி இவா்களுக்குள் ஏற்பட்ட தகராறால் யுவராஜ் ஊது குழலால் தாக்கியதில் சுப்புலட்சுமி உயிரிழந்தாா். இதுதொடா்பாக யுவராஜை போ்ணாம்பட்டு போலீஸாா் கைது செய்து வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
கடந்த 24- ஆம் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த யுவராஜ், கடந்த 5 நாள்களாக போ்ணாம்பட்டு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தாா்.
மனைவியைக் கொலை செய்து விட்டோமே என்ற வேதனையில் இருந்த யுவராஜ், சனிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.