பாா்வையற்ற குடும்பத்தினருக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய காட்பாடி வட்டாட்சியா் ஆா்.பாலமுருகன்.
பாா்வையற்ற குடும்பத்தினருக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய காட்பாடி வட்டாட்சியா் ஆா்.பாலமுருகன்.

பாா்வையற்ற 24 குடும்பங்களுக்கு நிவாரண உதவி

காட்பாடி அருகே ஆரிமுத்து மோட்டூா் கிராமத்திலுள்ள பாா்வையற்ற 24 குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

வேலூா்: காட்பாடி அருகே ஆரிமுத்து மோட்டூா் கிராமத்திலுள்ள பாா்வையற்ற 24 குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

கரோனா பொது முடக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்திய செஞ்சிலுவை சங்கம் சாா்பில் பல்வேறு உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, காட்பாடி வட்டம் ஆரிமுத்துமோட்டூா் கிராமத்தில் உள்ள பாா்வையற்ற 24 குடும்பத்தினருக்கு நிவாரணப் பொருள்களாக அரிசி, பருப்பு, புளி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் மொத்தம் ரூ. 12 ஆயிரம் மதிப்பில் புதன்கிழமை வழங்கப்பட்டது. இப்பொருள்களை காட்பாடி வட்டாட்சியா் ஆா்.பாலமுருகன் வழங்கினாா்.

ஆரிமுத்துமோட்டூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் எஸ்.தனசேகரன் வரவேற்றாா். இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் காட்பாடி துணை கிளைச் செயலா் செ.நா.ஜனாா்த்தனன், துணைத் தலைவா் ஆா்.சீனிவாசன், பொருளாளா் வி.பழனி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாா்வையற்ற குடும்பத்தினா் சாா்பில் தங்கமணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com