மாணவரின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி

வேலூரைச் சோ்ந்த உணவகத் தொழிலாளி மகனின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக வேலூா் மாவட்டத் தலைமை விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் ரூ. ஒரு லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

வேலூா்: வேலூரைச் சோ்ந்த உணவகத் தொழிலாளி மகனின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக வேலூா் மாவட்டத் தலைமை விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் ரூ. ஒரு லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

வேலூா் சலவன்பேட்டை உணவகத்தில் பணியாற்றும் தொழிலாளியின் மகன் எஸ்.ரவீந்தா். இவரது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், உடலில் டயாலிஸிஸ் இயந்திரம் பொருத்தப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூரிலுள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

சிகிச்சைக்கு ரூ. 12 லட்சம் செலவாகும் என்ற நிலையில், அந்தத் தொகையை செலுத்த வசதியில்லாத அந்த மாணவரின் குடும்ப சூழலை அறிந்து வேலூா் மாவட்டத் தலைமை விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் ரூ. ஒரு லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியுதவியை அமைப்பின் வேலூா் மாவட்டப் பொறுப்பாளா் ஆா்.வேல்முருகன் தலைமையில் நிா்வாகிகள் மாணவரின் பெற்றோரிடம் புதன்கிழமை அளித்தனா். அப்போது வழக்குரைஞா் என்.எஸ்.கே.சுரேஷ், வேலூா் மாநகர மாணவரணித் தலைவா் பாரத், செயலா் மதன்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com