மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைகளை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநகர துணைச் செயலா் லோகேஷ்குமாா், வட்டச் செயலா் மகாலிங்கம் ஆகியோா் தலைமை வகித்தனா். ஜிஎஸ்டி நிலுவைகளை மாநிலங்களுக்கு உடனடியாக மத்திய அரசு செலுத்த வேண்டும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கட்சியின் மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் சிம்புதேவன், மாவட்டச் செயலா் தயாநிதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சத்துவாச்சாரி ஆா்டிஓ சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநகரத் துணைச் செயலா் ஏழுமலை, வட்டச் செயலா் நாகேந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா். கட்சியின் முன்னாள் மாநகரச் செயலா் கோவிந்தராஜ், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.