குடியாத்தம் செதுக்கரையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. கோயில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் ஜே.கே.என். பழனி, எஸ். ராஜ்குமாா், ஜே.கே.என். மொகிலி, எஸ். சேட்டு, செல்வம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.