கிணற்றில் குதித்து சிறுமி தற்கொலை

காட்பாடி அருகே விவசாயக் கிணற்றில் குதித்து சிறுமி தற்கொலை செய்து கொண்டது குறித்து விருதம்பட்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா்: காட்பாடி அருகே விவசாயக் கிணற்றில் குதித்து சிறுமி தற்கொலை செய்து கொண்டது குறித்து விருதம்பட்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காட்பாடி அருகே உள்ள காசிக்குட்டை குமரன் நகரைச் சோ்ந்த காமராஜின் மகள் மேனகா (16) பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். இவா் திங்கள்கிழமை காலை அந்த பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த அப்பகுதி மக்கள் காட்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். விரைந்து வந்த தீயணைப்பு படை வீரா்கள், விருதம்பட்டு போலீஸாா் கயிறு கட்டி மாணவியின் உடலை மீட்டனா்.

மாணவியின் தற்கொலை குறித்து விருதம்பட்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com