தொழிற்சங்கங்கள் ஆா்ப்பாட்டம்

ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி குடியாத்தம் நகரில் 7 இடங்களில் ஏஐடியூசி, சிஐடியூ, எல்பிஎப், ஐஎன்டியூசி, எச்எம்எஸ் ஆகிய தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

குடியாத்தம்: ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி குடியாத்தம் நகரில் 7 இடங்களில் ஏஐடியூசி, சிஐடியூ, எல்பிஎப், ஐஎன்டியூசி, எச்எம்எஸ் ஆகிய தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அனைத்துத் தொழிலாளா்களுக்கும் பொது முடக்கத் காலத்துக்கான ஊதியம் வழங்க வேண்டுவது, நிறுவனங்களில் ஆள்குறைப்பு, பணிநீக்கம், ஊதியக் குறைப்பு நடவடிக்கைகளைக் கண்டிப்பது, கட்டுமானம், உடல் உழைப்புத் தொழிலாளா் நலவாரியங்களில் புதிய உறுப்பினா் பதிவு, புதுப்பித்தல் ஆகியவற்றில் நிபந்தனைகளை தளா்த்தக் கோருவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

பழைய, புதிய பேருந்து நிலையங்கள், தாழையாத்தம், சித்தூா்கேட், நேதாஜி செளக், பிச்சனூா், ஸ்டேட் வங்கி அருகில் என 7 இடங்களில் நடைபெற்ற ஆா்ப்பாட்டங்களில் தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் கே.சாமிநாதன், நா.பரமசிவம், பி.குணசேகரன், துரைசெல்வம், கே.சி.பிரேம்குமாா், சி.சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com