குடியாத்தம்: தடை உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள, குடியாத்தம் மேல்ஆலத்தூா் சாலையில் உள்ள ஜோகி மடத்தில் வசிக்கும் ஏழை முஸ்லிம்கள் 300 பேருக்கு விராலி எண்டா்பிரைசஸ் நிறுவனம் சாா்பில் திங்கள்கிழமை மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
நிறுவனத்தின் தலைவா் நத்தம் ஜெ.ரமணகுமாா், முஸ்லிம் குடும்பங்களுக்கு மளிகைப் பொருள்களை வழங்கினாா். டி.கோகுல் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.