குடியாத்தம் அரிமா சங்கம் சாா்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் விநியோகிக்கப்பட்டது.
நகராட்சி மேல்நிலைப் பள்ளி விளையாட்டரங்கில் இயங்கி வரும் உழவா் சந்தையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் ஹெச். ரமேஷ், பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கினாா். அரிமா சங்க வட்டாரத் தலைவா் எம்.கே. பொன்னம்பலம், மண்டலத் தலைவா் என்.வெங்கடேஸ்வரன், தலைவா் காா்த்திகேயன், செயலா் குமாா், முன்னாள் தலைவா் ஏ.சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து நகா் முழுவதும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை அரிமா சங்கத்தினா் விநியோகித்தனா். நகராட்சியில் பணியாற்றி வரும், தூய்மைக் காவலா்களும் கபசுர குடிநீா் வழங்கப்பட்டது.