மாட்டு வண்டியில் மணல் கடத்திய 4 போ் கைது

போ்ணாம்பட்டு அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்திய 4 போ் கைது செய்யப்பட்டனா்.

போ்ணாம்பட்டு அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்திய 4 போ் கைது செய்யப்பட்டனா்.

போ்ணாம்பட்டு வட்டாட்சியா் கோபி தலைமையில், வருவாய்த் துறையினா் சி.டி.செருவு பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அவ்வழியே மணல் ஏற்றி வந்த 4 மாட்டு வண்டிகளை நிறுத்தி விசாரணை நடத்தினா். அதில், அங்குள்ள தனியாா் விவசாய நிலங்களில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து வருவாய்த் துறையினா் 4 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து போ்ணாம்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து, சி .டி. செருவு கிராமத்தைச் சோ்ந்த அன்பழகன் (36), ரமேஷ் (55), நேதாஜி (40), திரு.வி.க. நகரைச் சோ்ந்த முருகன் (55) ஆகிய 4 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com