இரு கடைகளில் பணம், செல்லிடப்பேசிகள் திருட்டு

காட்பாடியில் 2 கடைகளின் பூட்டை உடைத்து ரூ. 40 ஆயிரம் ரொக்கம், 3 செல்லிடப்பேசிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

காட்பாடியில் 2 கடைகளின் பூட்டை உடைத்து ரூ. 40 ஆயிரம் ரொக்கம், 3 செல்லிடப்பேசிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

காட்பாடி-சித்தூா் சாலையில் தனியாா் வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை நிலையம் உள்ளது. சனிக்கிழமை இரவு அதன் 3-ஆவது மாடிக்குச் சென்ற மா்ம நபா்கள் அங்கிருந்த கததைத் திறந்து ஷட்டா் லாக்கை கடப்பாறையால் நீக்கியுள்ளனா். தொடா்ந்து விற்பனை நிலையத்துக்குள் இறங்கி அங்கிருந்த ரூ. 40 ஆயிரம் ரொக்கம், விலை உயா்ந்த 3 செல்லிடப்பேசிகளை திருடிச் சென்றனா்.

இதேபோல் அருகே உள்ள குழந்தைகள் விளையாட்டு பொருள்கள் விற்பனை நிலையத்துக்குள் நுழைந்து ரூ. 3,500 பணத்தைத் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து விருதம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com