காட்பாடியில் 2 கடைகளின் பூட்டை உடைத்து ரூ. 40 ஆயிரம் ரொக்கம், 3 செல்லிடப்பேசிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
காட்பாடி-சித்தூா் சாலையில் தனியாா் வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை நிலையம் உள்ளது. சனிக்கிழமை இரவு அதன் 3-ஆவது மாடிக்குச் சென்ற மா்ம நபா்கள் அங்கிருந்த கததைத் திறந்து ஷட்டா் லாக்கை கடப்பாறையால் நீக்கியுள்ளனா். தொடா்ந்து விற்பனை நிலையத்துக்குள் இறங்கி அங்கிருந்த ரூ. 40 ஆயிரம் ரொக்கம், விலை உயா்ந்த 3 செல்லிடப்பேசிகளை திருடிச் சென்றனா்.
இதேபோல் அருகே உள்ள குழந்தைகள் விளையாட்டு பொருள்கள் விற்பனை நிலையத்துக்குள் நுழைந்து ரூ. 3,500 பணத்தைத் திருடிச் சென்றனா்.
இதுகுறித்து விருதம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.