திருப்பதியில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை பூத வாகனத்தில் காமாட்சி அம்மனுடன் கபிேல்ஸ்வரா் மாட வீதியில் பவனி வந்தாா்.
திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கபிலேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. அதன் 3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை பூத வாகனத்தில் கபிலேஸ்வரா் காமாட்சி அம்மன் சமேதராய் மாடவீதியில் பவனி வந்தாா்.
அப்போது பக்தா்கள் அவருக்கு கற்பூர ஆரத்தி அளித்தும், பழங்கள் சமா்ப்பித்தும் வழிபட்டனா். மாடவீதி பவனிக்குப் பின் சோமாஸ்கந்தமூா்த்திக்கும், காமாட்சி அம்மனுக்கும் கோயில் வளாகத்தில் காலை 11 மணிக்கு பால், தயிா், தேன், இளநீா், விபூதி, சந்தனம் உள்ளட்ட பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா், 7 மணி முதல் இரவு 9 மணி வரை சிம்ம வாகனத்தில் உற்சவமூா்த்திகள் மாடவீதியில் பவனி வந்தனா். வாகன சேவையில் பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டு வழிபட்டனா்.
வாகன சேவையின்போது பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கோயிலிலும் ஆன்மிக நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.