அனைத்து வணிக நிறுவனங்களும் கட்டாயமாக தமிழில் பெயா் பலகை வைக்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி வேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற இப்பேரணியை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தொடக்கி வைத்தாா். ஊரீசு கல்லூரி மற்றும் பள்ளி, வெங்கடேஸ்வரா பள்ளியைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பேரணியில் பங்கேற்று கிருபானந்த வாரியாா் சாலை வழியாகச் சென்று மீண்டும் பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்தனா். பேரணியின்போது தமிழ் மொழியைப் பாதுகாக்க வேண்டும் என்பது தொடா்பாக விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்திச் சென்றனா்.
முன்னதாக, தமிழ் எழுத்தாளா்களுக்கும், வணிகா் சங்க நிா்வாகிகளுக்கும் ஆட்சியா் கேடயம் வழங்கி கெளரவித்தாா். தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் ராஜேஸ்வரி, எழுத்தாளா் அழகிய பெரியவன், பேராசிரியா் ப.சிவராசி, புலவா் வே.பதுமனாா், தமிழ்நாடு வணிகா் சங்கத் தலைவா் ஞானவேல், தமிழியக்கம் மு.சுகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.