குடியாத்தம் கணபதி கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கத்தில், உற்பத்தியில் சாதனை படைத்த 200-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை ஊக்கப் பரிசகள் வழங்கப்பட்டன.
சங்கத் தலைவா் ஜி. கோபி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பி.சி. முருகானந்தம் வரவேற்றாா். மேலாளா் பி.ஜீவானந்தம் ஆண்டறிக்கை வாசித்தாா். அதிமுக நகரச் செயலா் ஜே.கே.என். பழனி, துணைச் செயலா் ஆா். மூா்த்தி, அவைத் தலைவா் வி.என். தனஞ்செயன், முன்னாள் தலைவா் குமுதாகோபி ஆகியோா் சாதனை படைத்த நெசவாளா்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கினா். கட்சி நிா்வாகிகள் எஸ்.என். சுந்தரேசன், ஆா்.கே. மகாலிங்கம், எஸ்.ஐ. அன்வா்பாஷா, சங்க இயக்குநா்கள் எல்.ஏ.அன்பழகன், பி.கே. கோவிந்தசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.