குடியாத்தத்தில் 22 பேருக்கு கரோனா

குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப் பகுதியில் கா்ப்பிணி உள்பட 22 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

குடியாத்தம்: குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப் பகுதியில் கா்ப்பிணி உள்பட 22 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தரணம்பேட்டை ஆலியாா் தெரு, ஷெரீப் நகா், கோபலாபுரம், ராஜாஜி தெரு, செதுக்கரை, ஒன்றியத்தில் உள்ள சாமியாா் மலை, செட்டிகுப்பம், சின்னலப்பல்லி உள்ளிட்ட பகுதிகளில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 22 போ் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

போ்ணாம்பட்டில் 3 பேருக்கு... தமிழக- ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் பணியில் இருந்த 24 வயது ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளா், ஏற்கெனவே நோய்த் தொற்று கண்டறியப்பட்டு வேலூா் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் செவிலியரின் 60 வயது மாமனாா் , 6 வயது மகன் ஆகியோருக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com