போ்ணாம்பட்டு அருகே உள்ள மதினாப்பல்லி ஆற்றில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளம் செல்கிறது.
போ்ணாம்பட்டை அடுத்த ஆந்திர மாநில வனப்பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழக எல்லையான பத்தரபல்லி அருகே தொடங்கும் மதினாப்பல்லி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆறு நரியம்பட்டு வழியாகச் சென்று பாலாற்றில் கலக்கிறது.
மதினாப்பல்லி ஆற்று வெள்ளத்தால், போ்ணாம்பட்டு, சுற்றுப் பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.