தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த உதவி அறுவை சிகிச்சை மருத்துவருக்கான இணைய வழித் தோ்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில் உதவி அறுவை சிகிச்சை மருத்துவா்களைத் தோ்வு செய்ய வேலூா் தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும் இணையவழி மூலம் தோ்வு நடத்தப்பட அறிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இந்தத் தோ்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தோ்வு நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும்.