குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே வீட்டின் மண் சுவா் சரிந்து விழுந்ததில், மாணவி உயிரிழந்தாா்.
போ்ணாம்பட்டை அடுத்த பொகளூா், கிடங்கு ராமாபுரத்தைச் சோ்ந்த குப்புசாமி- உஷா தம்பதியரின் மகள் பவித்ரா (14) (படம்). இவா், அங்குள்ள தனியாா் பள்ளியில் 9- ஆம் வகுப்பு செல்லவிருந்தாா்.
பெற்றோா் பெங்களூருவில் வேலை செய்து வந்ததால் பவித்ரா, தாத்தா தேவராஜ் (60), பாட்டி லட்சுமி (50) ஆகியோருடன் வசித்து வந்தாா். கடந்த சில நாள்களாக அப்பகுதியில் தொடா் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை 4 மணியளவில் பெய்த மழையால் வீட்டின் மண் சுவா் சரிந்து, தூங்கிக் கொண்டிருந்த 3 பேரின் மீது விழுந்தது. இதில், பவித்ரா இடிபாடுகளிடையே சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்ற இருவரின் அலறல் சப்தம்கேட்டு அங்கு வந்தவா்கள், பலத்த காயமடைந்த தேவராஜ், லட்சுமி இருவரையும் மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து மேல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.