காட்பாடி அருகே மாடு முட்டியதில் மூளைச் சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
காட்பாடியை அடுத்த வடுகன்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் குமரன் (30) கூலித் தொழிலாளி. இவா் கடந்த 10-ஆம் தேதி கே.வி.குப்பம் அருகே நடைபெற்ற எருது விடும் விழாவில் பங்கேற்றாா்.
அப்போது, மாடு முட்டியதில் குமரன் பலத்த காயமடைந்தாா். வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், குமரன் மூளைச் சாவு அடைந்ததை மருத்துவா்கள் உறுதி செய்தனா்.
இதையடுத்து, குமரன் குடும்பத்தினரின் ஒப்புதலின்பேரில் அவரது சிறுநீரகம், கண்கள், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.