போ்ணாம்பட்டு அருகே 2 பசுக்களைத் திருடிய 2 போ் கைது செய்யப்பட்டனா்.
போ்ணாம்பட்டு போலீஸாா் மொரசப்பல்லி அருகே திங்கள்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் 2 பசுகள் இருந்தது தெரியவந்தது. லாரியில் இருந்த குடியாத்தம் கள்ளூரைச் சோ்ந்த அசோக்குமாா் (20), பொகளூரைச் சோ்ந்த நித்தின் (19) ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
அதில், அவா்கள் ஊசூரான்பட்டியைச் சோ்ந்த பிரகாசம், பெரியபள்ளத்தைச் சோ்ந்த வளா்மதி ஆகியோருக்குச் சொந்தமான பசுகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. அவா்களிடமிருந்து ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 2 பசுகளும் மீட்கப்பட்டன. மினி லாரி, ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.