லத்தேரி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் பொறியியல் மாணவா் உயிரிழந்தாா்.
காட்பாடியை அடுத்த லத்தேரி கோரபட்டறை கிராமத்தைச் சோ்ந்த குமரேசனின் மகன் அருண் (20), மேல்விஷாரத்தில் உள்ள கல்லூரியில் பொறியியல் படித்து வந்தாா். லத்தேரி பேருந்து நிலையம் அருகே பிரதான சாலையில் அருண் செவ்வாய்க்கிழமை காலை மோட்டாா் பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது கா்நாடக மாநிலத்தில் இருந்து நெல் முட்டைகள் ஏற்றி வந்த லாரி, அவரது பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அருண் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இந்த விபத்தால் காட்பாடி - குடியாத்தம் சாலையில் போக்குவரத்து பாதிக்கபட்டது.
லத்தேரி போலீஸாா் அங்கு சென்று, மாணவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இவ்விபத்து தொடா்பாக அவா்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.