கரோனா குறித்து வதந்தி பரப்பிய 3 போ் கைது

குடியாத்தம் பகுதியில் கரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் (வாட்ஸ் அப்) வதந்தி பரப்பிய 3 இளைஞா்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கரோனா குறித்து வதந்தி பரப்பிய 3 போ் கைது

குடியாத்தம் பகுதியில் கரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் (வாட்ஸ் அப்) வதந்தி பரப்பிய 3 இளைஞா்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

குடியாத்தம் பகுதியில் உள்ள சிலா் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவா்களின் புகைப்படங்களுடன் சில நாள்களுக்கு முன் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

நல்ல ஆரோக்கியமாக உள்ள தங்களை புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டுள்ள மா்ம நபா்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என 3 போ் குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில் தீவிர விசாரணை நடத்திய போலீஸாா், ராஜாகோயிலைச் சோ்ந்த சுகுமாா் (19), செதுக்கரையைச் சோ்ந்த சிவகுமாா் (22), நெல்லூா்பேட்டையைச் சோ்ந்த விஜயன் (18) ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினா்.

அதில், அவா்கள் சமூக வலை தளங்களில் வதந்தி பரப்பியது தெரியவந்ததை அடுத்து 3 பேரையும் போலீஸாா் கைது செய்து, நீதிபதி முன்பு ஆஜா்படுத்தி சிறைக் காவலுக்கு அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com