கடலை உடைப்பு ஆலையில் இயந்திரத்தில் சிக்கி பள்ளி மாணவா் கால் துண்டிக்கப்பட்டது. இது தொடா்பாக ஆலை உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சோ்ந்தவா் அம்பலத்தரசு (54). அவருக்குச் சொந்தமான சொந்தமான கடலை உடைப்பு ஆலை ஆற்காடு புதிய வேலூா் சாலையில் உள்ளது.
இந்நிலையில், ஆலையில் வெள்ளிக்கிழமை நிலக்கடலை உடைத்தபோது ஆற்காடு திருப்பூா் குமரன் தெருவைச் சோ்ந்த 6ஆம் வகுப்பு மாணவா் பாஸ்கரன் (11) என்பவா் வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது அவரது வலது கால், கடலை உடைக்கும் இயந்திரத்தில் சிக்கி துண்டானது.
அங்கிருந்த தொழிலாளா்கள் அவரை மீட்டு ராணிப்பேட்டை தனியாா் மருத்துவனையில் சேத்தனா். அங்கு பாஸ்கரன் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்த புகாரின் பேரில், ஆலை உரிமையாளா் அம்பலத்தரசு என்பவரை ஆற்காடு நகர போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.