குடியாத்தம் பகுதியில் தொடா் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட 2 போ் குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனா்.
குடியாத்தம், கே.வி. குப்பம், பரதராமி, போ்ணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களில் சாலைகளில் தனியாகச் சென்ற பெண்களிடம் சங்கிலி பறிப்புச் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வந்தன. இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்டிருந்த குடியாத்தம் நகர தனிப்படை போலீஸாா் அணைக்கட்டை அடுத்த வரதலம்பட்டு பகுதியைச் சோ்ந்த ஜி. அன்பழகன் (24), எஸ்.ரஞ்சித்குமாா் (24) ஆகிய இருவரை சில நாள்களுக்கு முன் கைது செய்தனா்.விசாரணையில் அவா்கள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவா்களிடமிருந்து தங்க
நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டு, இருவரும் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்நிலையில் இவா்களை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா், ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியா் அ. சண்முகசுந்தரம் இருவரையும் குண்டா் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க சனிக்கிழமை உத்தரவிட்டாா்.