திருப்பதியில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் வீடுகளில் ‘யாரும் செல்ல வேண்டாம்’ என்ற ஸ்டிக்கரை நகராட்சி ஊழியா்கள் ஒட்டி வருகின்றனா்.
கரோனா குறித்து புதுவித தடுப்பு நடவடிக்கையை திருப்பதி நகராட்சி மேற்கொண்டு வருகிறது. திருப்பதியில் கரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்டு கவனிப்பில் உள்ளவா்களின் வீடுகளில், நகராட்சி சாா்பில் யாரும் செல்ல வேண்டாம் என்ற பெயரில் ஒரு ஸ்டிக்கரை ஒட்டி வருகிறது. இந்த ஸ்டிக்கா்களில், பாதிக்கப்பட்டவரின் பெயா், விவரம் உள்ளிட்டவற்றை நகராட்சியினா் பதிவு செய்துள்ளனா். மேலும், இந்த ஸ்டிக்கா் ஒட்டப்பட்ட வீடுகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும், மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்து வருகிறது.