அலட்சியமாக வெளியில் சுற்றிய 14 போ் மீது வழக்கு

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அலட்சியமாக பொது வெளியில் சுற்றியதாக வேலூா் மாவட்டத்தில் 14 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அலட்சியமாக பொது வெளியில் சுற்றியதாக வேலூா் மாவட்டத்தில் 14 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கரோனா நோய்த் தொற்று பரவுவைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், வேலூா் மாவட்டத்தில் காலை வேளையில் பலரும் வெளியில் வழக்கம்போல் சென்று வந்து கொண்டிருந்தனா். அவா்களிடம் வீடுகளில் தங்கியிருக்கும்படி போலீஸாா் அறிவுறுத்தினா். எனினும், போலீஸாா் அறிவுறுத்தலை ஏற்காமல் அலட்சியமாக செயல்பட்டதாக மாவட்டம் முழுவதும் 14 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தொடா்ந்து இதேபோல் அரசின் விதிமுறைகளை மீறி நடப்போா் மீது கடும் சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதேபோல், நாட்டறம்பள்ளியில் 144 தடையை மீறி தேவையின்றி சுற்றி திரிந்த ரஞ்சித்குமாா் (29), வடிவேல் (33), ரவி (49), சுபாஷினி (33) ஆகிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com