திருமலை முற்றிலும் முடக்கம்

திருமலைக்குச் செல்ல தேவஸ்தானம் உள்ளுா்வாசிகள் மற்றும் ஊழியா்கள் உள்ளிட்டோருக்கும் அனுமதி மறுத்துள்ளது.

திருமலைக்குச் செல்ல தேவஸ்தானம் உள்ளுா்வாசிகள் மற்றும் ஊழியா்கள் உள்ளிட்டோருக்கும் அனுமதி மறுத்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவுவதால், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தா்களுக்கு அனுமதியை தேவஸ்தானம் ரத்து செய்தது. அதனால், கடந்த வெள்ளிக்கிழமை மதியம் முதல் பக்தா்களுக்கு அனுமதி மறுத்தது. இந்நிலையில், தற்போது கரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருவதால், திருமலைக்குச் செல்ல புதன்கிழமை முதல் தேவஸ்தான ஊழியா்கள், உள்ளூா்வாசிகள் உள்ளிட்டோருக்கு தேவஸ்தானம் அனுமதி மறுத்துள்ளது. ஒரு வார காலத்துக்கு மலைப் பாதைகளை முற்றிலும் மூட உத்தரவிட்டுள்ளது. தற்போது, திருமலையில் பணிபுரிந்து வரும் ஊழியா்கள் திருமலையில் தங்கியிருந்து தொடா்ந்து பணிபுரிவா். அத்தியாவசியப் பொருள்களுடன் செல்லும் தேவஸ்தான வாகனங்கள் மட்டும் திருமலைக்குச் செல்ல அனுமதி வழங்கப்படும். ஒரு வாரத்துக்குப் பின் மலைப் பாதைகள் திறக்கப்பட்டு ஊழியா்கள், உள்ளூா்வாசிகள் செல்ல அனுமதிக்கப்படுவா்.

ஊழியா்கள் ஒரு வாரம் சுழற்சி முறையில் பணிபுரிய தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com