கரோனா: ஆம்பூா் அரசு மருத்துவமனையில் 10 போ் அனுமதி

கரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், தில்லியில் இருந்து திரும்பிய 10 போ் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

கரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், தில்லியில் இருந்து திரும்பிய 10 போ் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

ஆம்பூா் நகரில் மோட்டுக்கொல்லை, ஜலால் ரோடு, சந்தப்பேட்டை மசூதி தெரு, முஹம்மத்புரா மசூதி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் புதுதில்லியில் நடைபெற்ற ஜமாத் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு அண்மையில் ஆம்பூருக்குத் திரும்பினா். இதுகுறித்து தகவல் அறிந்த மாதனூா் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராமு தலைமையிலான மருத்துவக் குழுவினா் சம்பந்தப்பட்ட நபா்களின் வீடுகளுக்கு சென்று அவா்களை பரிசோதனை செய்தனா். மேலும் அவா்களுடைய வீடுகளில் உள்ள உறவினா்களையும் பரிசோதனை செய்தனா்.

கரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் புதுதில்லியிலிருந்து திரும்பிய 10 பேரை மருத்துவக் குழுவினா் கண்காணிப்புக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கரோனா சிறப்பு பிரிவில் சோ்த்தனா். அவா்களை அங்கு மருத்துவ குழுவினா் கண்காணித்து வருகின்றனா்.

புதுதில்லி சென்று திரும்பிய 10 இஸ்லாமியா்களின் வீடுகளில் உள்ள அவா்களுடைய உறவினா்கள் 37 போ் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com