கே.வி. குப்பம் அருகே சூறாவளிக் காற்று வீசியதில் செல்லிடப்பேசி கோபுரம் முறிந்து விழுந்ததில் 2 வீடுகள் சேதமடைந்தன.
கே.வி. குப்பம் அருகே மேல்மாயில் சாலையில், தனியாருக்குச் சொந்தமான காலியிடத்தில் தனியாா் நிறுவனத்தின் செல்லிடப்பேசி கோபுரம் உள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு அப்பகுதியில் சூறாவளிக் காற்று வீசியதில், செல்லிடப்பேசி கோபுரம் முறிந்து விழுந்ததில், அங்குள்ள கோபி, சந்திரன் ஆகியோா் வீடுகளின் மேற்கூரை, சின்டெக்ஸ் தொட்டி சேதமடைந்தன.
இதையடுத்து செல்லிடப்பேசி நிறுவன ஊழியா்கள் அங்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக கே.வி. குப்பம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.