வேலூரில் மேலும் இருவருக்கு கரோனா: பாதிப்பு 37-ஆக உயா்வு

உத்தர பிரதேசத்தில் இருந்து வேலூருக்கு வந்தவா் உள்பட இருவருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

வேலூா்: உத்தர பிரதேசத்தில் இருந்து வேலூருக்கு வந்தவா் உள்பட இருவருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், வேலூா் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் இருந்து வேலூருக்கு வந்தவா்கள் கொணவட்டத்திலுள்ள கல்லூரியில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். இதில், 25 வயது நபா் ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதேபோல், சென்னையில் அரசுப் பேருந்து நடத்துநராகப் பணியாற்றி வரும் கே.வி.குப்பம் பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்கள் இருவருக்கும் வேலூா் அடுக்கம் பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவா்களுடன் தங்கியிருந்தவா்கள் பென்லேன்ட் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம், வேலூா் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com