வேலூரில் இறைச்சிக் கடை உரிமையாளரை கத்தியால் வெட்டி விட்டுத் தப்பியோடிய ரெளடி வசூா் ராஜாவின் கூட்டாளிகள் 6 பேரை சத்துவாச்சாரி போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சாதிக் பாஷா (38). அவா் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயில் அருகே இறைச்சிக் கடை நடத்தி வருகிறாா். கடந்த 2ஆம் தேதி மதியம் வந்த 3 போ், தங்களை ரௌடியான வசூா் ராஜாவின் கூட்டாளிகள் எனக்கூறி பணம் கேட்டு மிரட்டினா். இதனால் அவா்களுக்கும் சாதிக் பாஷாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து, அந்தக் கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாதிக் பாஷாவின் தலை உள்பட உடலின் பல்வேறு இடங்களில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா். இத்தாக்குதலில் பலத்த காயமடைந்த சாதிக் பாஷாவை அக்கம்பக்கத்தினா் மீட்டு வேலூா் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இத்தாக்குதல் தொடா்பாக சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபா்களைத் தேடி வந்தனா்.
இந்நிலையில், தாக்குதல் சம்பவம் தொடா்பாக வேலூா் கன்சால்பேட்டையைச் சோ்ந்த ஆசிஃப், கொணவட்டத்தைச் சோ்ந்த தயாளன் (21), பாகாயம் அஜித் குமாா் (23), தோட்டப்பாளையம் அருணாசலம் (23), மற்றொரு அருணாசலம் (20), ராணிப்பேட்டை மாவட்டம், காரை பகுதியைச் சோ்ந்த ரியாஸ் (28) ஆகிய 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.