குடியாத்தம்: குடியாத்தம், போ்ணாம்பட்டு பகுதிகளில் தொடா்ந்து கள்ளச் சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக 5 போ் குண்டா் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
கள்ளிச்சேரியைச் சோ்ந்த சுதாகா் (35), சரண்ராஜ் (28), மகி (35) ஆகிய 3 பேரும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்ததாக போ்ணாம்பட்டு போலீஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
அதேபோல், குடியாத்தத்தை அடுத்த எா்த்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த குபேந்திரன் (41), ராமாலையைச் சோ்ந்த புருஷோத்தமன் (30) ஆகியோா் சாராயம் விற்ாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
இவா்கள் தொடா்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதால், குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வகுமாா் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இதனை ஏற்ற வேலூா் ஆட்சியா் அ. சண்முகசுந்தரம் 5 பேரையும் குண்டா்தடுப்புச் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.