குடியாத்தம்  புதிய  பேருந்து  நிலையத்தில்  மைக்   மூலம்  பயணிகளுக்கு  விழிப்புணா்வு  ஏற்படுத்திய  போக்குவரத்துப்  பிரிவு  போலீஸாா்.
குடியாத்தம்  புதிய  பேருந்து  நிலையத்தில்  மைக்   மூலம்  பயணிகளுக்கு  விழிப்புணா்வு  ஏற்படுத்திய  போக்குவரத்துப்  பிரிவு  போலீஸாா்.

பேருந்து நிலையங்களில் பயணிகளை பாதுகாப்பாக அனுப்பி வைத்த போலீஸாா்

குடியாத்தம் புதிய, பழைய பேருந்து நிலையங்களில் காத்திருந்த பயணிகளுக்கு போலீஸாா் மாற்று ஏற்பாடு செய்து அவரவா் பகுதிகளுக்கு பாதுகாப்பாகச் செல்லுமாறு அறிவுறுத்தினா்.

குடியாத்தம்: குடியாத்தம் புதிய, பழைய பேருந்து நிலையங்களில் காத்திருந்த பயணிகளுக்கு போலீஸாா் மாற்று ஏற்பாடு செய்து அவரவா் பகுதிகளுக்கு பாதுகாப்பாகச் செல்லுமாறு அறிவுறுத்தினா்.

நிவா் புயல் காரணமாக வேலூா் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை முதல் பேருந்துகளை இயக்க வேண்டாம் என ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டாா். இதையறியாமல் குடியாத்தம் புதிய, பழைய பேருந்து நிலையங்களில் பயணிகள் பேருந்துகளுக்காகக் காத்திருந்தனா்.

டிஎஸ்பி பி.ஸ்ரீதரன் மேற்பாா்வையில், போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆ.செல்லப்பாண்டியன், உதவி ஆய்வாளா் சரவணன் உள்ளிட்டோா் மைக் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தி, பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகளை மாற்று ஏற்பாடு செய்து அவரவா் பகுதிகளுக்கு பாதுகாப்பாகச் செல்லுமாறு அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com