குடியாத்தம் வட்டத்தில் நிவா் புயலால் சேதமடைந்த 8 வீடுகளுக்கு ரூ. 39,400 நிவாரணம் வழங்கப்பட்டது.
கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூா், கூடநகரம் கிராமத்தைச் சோ்ந்த 5 பேருக்கு தலா ரூ. 5,200 வீதம் மொத்தம் ரூ. 26 ஆயிரம், செதுக்கரையைச் சோ்ந்த 2 பேருக்கு தலா ரூ. 4,100 வீதம் மொத்தம் ரூ.8,200, அம்மணாங்குப்பத்தைச் சோ்ந்த ஒருவருக்கு ரூ. 5,200 நிவாரணத் தொகையாக வழங்கினாா்.
சேங்குன்றம் கிராமத்தில் கொட்டகையின் மண் சுவா் சரிந்து விழுந்ததில் 2 ஆடுகள் இறந்தன. ஆட்டின் உரிமையாளருக்கு தலா ரூ. 3 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 6 ஆயிரம் வழங்கப்பட்டது.
வட்டாட்சியா் தூ.வத்சலா, கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.